வலியுடன் வாழப் பழகிக் கொள்வேன் / Raa Raa | Valiyudan Vaazha Pazhagi Kolveen - ரா ரா
அப்பாவிற்கு ...உயிர் தந்த நீங்கள், உங்கள் பிரிவைத் தாங்க மனம் தரவில்லைஅறிவு தந்த நீங்கள், அழுகையை மறைக்கச் சொல்லித் தரவில்லைஉழைப்பும் முயற்சியும் என்றும் கைவிடாது வாழ்க்கை என்பது பல்சுவை கொண்டதுதைரியம் காக்கும் கவசம் போன்றதுஎல்லாம் சொல்லித் தரவில்லை வாழ்ந்து காட்டினீர்கள்இருந்தும் மறைவு என்னும் பெரும் வலியைக் கையாளச் சொல்லித் தரவில்லை காலம் வலியது எல்லாவற்றையும் மறக்கச் செய்யும்என் மனதில் பொக்கிஷமாய் இருக்கும் உங்கள் நினைவுகளை அல்லவலியை மறக்க முடியாது, ஆனால் வலியுடன் வாழப் பழகிக் கொள்வேன்உங்கள் அன்பு மகள்அம்மு